/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சூர்யா மருத்துவமனை இல்ல திருமண வரவேற்பு: புதுச்சேரி முதல்வர் வாழ்த்து
/
சூர்யா மருத்துவமனை இல்ல திருமண வரவேற்பு: புதுச்சேரி முதல்வர் வாழ்த்து
சூர்யா மருத்துவமனை இல்ல திருமண வரவேற்பு: புதுச்சேரி முதல்வர் வாழ்த்து
சூர்யா மருத்துவமனை இல்ல திருமண வரவேற்பு: புதுச்சேரி முதல்வர் வாழ்த்து
ADDED : செப் 14, 2024 07:31 AM

கடலுார்: கடலுாரில் நடந்த சூர்யா மருத்துவமனை இல்ல திருமண வரவேற்பு விழாவில் மணமக்களை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்தினார்.
கடலுார், மஞ்சக்குப்பம் சூர்யா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் நாராயணன்-உமாதேவி தம்பதி மகன் டாக்டர் பாலவிக்னேஸ்வரன், சென்னை டாக்டர் பழனி-பிரமிளா தம்பதி மகள் டாக்டர் நிஷாந்தினி ஆகியோரின் திருமண வரவேற்பு கடலுார் வள்ளி விலாஸ் திருமண மண்டபத்தில் நடந்தது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மணமக்களை வாழ்த்தினார்.
சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன், மீனவர் பேரவை அன்பழகன், எம்.பி., ரவிக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், அங்காளன், தேசிய மீனவர் கட்சி மாநில தலைவர் வக்கீல் சிவராஜ், செயலாளர் வேலவன், துணை மேயர் தாமரைச்செல்வன், மின்சார தொழிலாளர் சம்மேளனம் ரவிசங்கர், டாக்டர்கள் ராஜேந்திரன், இளந்திரையன், சீனுவாசராஜா, முகுந்தன், திருமலை சங்கர், ஆர்.கே.ஐ.டி.ஐ., முகுந்தன், சுபஸ்ரீ வள்ளி விலாஸ் கணேசன், கவுன்சிலர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தமிழ்நாடு மீனவர் பேரவை நிர்வாகிகள் மணமக்களை வாழ்த்தினர்.
தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் மாரியப்பன், இன்ஜினியர் பாலமுருகன், வித்யா, இன்ஜினியர் சீனுவாசன், தனலட்சுமி, டாக்டர்கள் ஆதிஷ்வர்குமரன், ஸ்ருதி பாக்கியலட்சுமி மற்றும் தருனேஷ்வரன், சரத்பவனேஸ் நன்றி கூறினர்.