/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெலிங்டன் வாய்க்கால் துார்வாரும் பணி தீவிரம்
/
வெலிங்டன் வாய்க்கால் துார்வாரும் பணி தீவிரம்
ADDED : செப் 13, 2024 07:19 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள சவுந்திரசோழபுரம, திருமலை அகரம், அரியராவி, பூவனுார், செம்பேரி, இருளம்பட்டு, மாளிகைக் கோட்டம் சின்னகொசப்பள்ளம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள், திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் ஏரி பாசன வாய்க்கால் மூலம் வரும் தண்ணீரை பயன்படுத்தி நெல், கரும்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வது வழக்கம்.
அதில், பெண்ணாடத்தில் இருந்து சவுந்திரசோழபுரம் செல்லும் பாசன வாய்க்காலில் சம்பு, கோரை புற்கள் அதிகளவில் மண்டியுள்ளதால் விரைவில் துவங்க உள்ள வடகிழக்கு பருவமழைக்கு வாய்க்காலில் உடைப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
அதன்படி, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெலிங்டன் பாசன வாய்க்காலில் மண்டிய சம்பா, கோரை புற்கள், சீமை கருவேல மரங்களை பொக்லைன் மூலம் பொதுப்பணித்துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.