ADDED : மார் 25, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: கணவரை காணவில்லை என மனைவி போலீசில், புகார் செய்துள்ளார்.
கிள்ளை எம்.ஜி.ஆர்., திட்டு சுனாமி நகரை சேர்ந்தவர் இதயசங்கர், 35; மீனவர். இவர், வெளிநாட்டில் சம்பாதித்த பல லட்சம் பணத்தை சூதாட்டில் இழந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 19ம் தேதி எமகா பைக் மற்றும, வங்கி புத்தகம், ஆதார் அட்டையுடன், வெளியில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து, இதயசங்கரின் மனைவி பாக்கியா கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, இதயசங்கரை தேடிவருகின்றனர்.

