ADDED : ஆக 28, 2024 07:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி, : பண்ருட்டியில் கணவரைக் காணவில்லை என மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி, கஸ்துாரிபாய் தெருவைச் சேர்ந்தவர் முத்து, 42; முகமது நபி தெருவில் வெல்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
இவர், கடந்த 15ம் தேதி வேலைக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மனைவி சத்யா, 39; அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.