ADDED : மார் 10, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை; சிதம்பரம் அருகே மனைவியை, காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் மணவெளி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து, 38; இவரது, மனைவி மதியரசி, 34; இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஒரு ஆண், மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில், மதியரசி கடந்த 7ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், கிள்ளை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்குப் பதிந்து,மதியரசியை, தேடிவருகிறார்.