ADDED : ஜூன் 20, 2024 08:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அருகே மனைவியை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த சிறுவத்துார் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி தனலட்சுமி, 23 ;திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ஊருக்கு வந்த பின் மீண்டும் கடந்த 19ம் தேதி திருப்பூர் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவரை காணவில்லை.
இதுகுறித்து கிருஷ்ணன் கொடுத்த புகாரில், புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.