sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

காட்டுப்பன்றி வேட்டை; 5 பேர் மீது வழக்கு

/

காட்டுப்பன்றி வேட்டை; 5 பேர் மீது வழக்கு

காட்டுப்பன்றி வேட்டை; 5 பேர் மீது வழக்கு

காட்டுப்பன்றி வேட்டை; 5 பேர் மீது வழக்கு


ADDED : ஜூன் 20, 2024 09:01 PM

Google News

ADDED : ஜூன் 20, 2024 09:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மின்வேலி அமைத்து காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய 5 பேர் மீது வனத்துறையினர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிகுடி கிராமத்தில் மின்வேலி அமைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடி, புதுக்கூரைப்பேட்டை பகுதியில் கட்டுபன்றி இறைச்சி விற்கப்படுவதடுவதாக, விருத்தாசலம் வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், வனச்சரக அலுவலர் ரகுவரன், தலைமை வனவர் சிவக்குமார், வனக்காப்பாளர் நவநீதகிருஷ்ணன், அமுதபிரியன், ராம்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று புதுக்கூரைப்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஆலிச்சிகுடியைச் சேர்ந்த அழகேசன், 65 என்பவரது வயலில் மின்வேலி அமைத்து, காட்டுபன்றிகளை வேட்டையாடியது தெரியவந்தது. அதைடுத்து, அழகேசன், இருப்புகுறிச்சியை சேர்ந்த எடிசன், ஜஸ்டின், முதனை உத்தண்டராயன், வல்லரசு ஆகிய 5 பேர் மீது, விருத்தாசலம் வனத்துறையினர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். காட்டுப்பன்றி பறிமுதல் செய்து புதைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us