sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஸ் பின்புற ஏணியில் மாணவர்களின் ஆபத்தான பயணம் தடுக்கப்படுமா

/

பஸ் பின்புற ஏணியில் மாணவர்களின் ஆபத்தான பயணம் தடுக்கப்படுமா

பஸ் பின்புற ஏணியில் மாணவர்களின் ஆபத்தான பயணம் தடுக்கப்படுமா

பஸ் பின்புற ஏணியில் மாணவர்களின் ஆபத்தான பயணம் தடுக்கப்படுமா


ADDED : ஜூலை 30, 2024 05:42 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில், பஸ் பின்புற ஏணியில் நின்றவாறு மாணவர்கள் பயணிப்பதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேத்தியாத்தோப்பில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் சுற்றியுள்ள சோழத்தரம், ஸ்ரீமுஷ்ணம், வீராணம் ஏரிக்கரை, ஒரத்துார் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவர்கள் வந்து படிக்கின்றனர்.

அவர்கள் பெரும்பாலும், பஸ் படிகட்டுகளில் தொங்கியபடியும், தனியார் பஸ்களில் பின்புறத்தில் ஏணியில் ஏறி நின்றபடியும் சாகச பயணத்தில் ஈடுபடுகின்றனர்.

தனியார் பஸ்களில் அதிகளவு பயணிகளை ஏற்றி உள்ளே இடம் இல்லாததால் மாணவர்கள் குறித்த நேரத்திற்குள் பள்ளிக்கு வருவதற்காக இதுபோன்று உயிருக்கு ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர்.

அரசு பஸ் படிகட்டுகளில் பயணம் செய்யக்கூடாது அதனால் ஏற்படும் உயிரிழப்பு குறித்து பல விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், மாணவர்களின் ஆபத்தான பயணம் தொடர்கிறது.

எனவே போக்குவரத்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள், ஏற்றி வரும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அத்துடன், மாணவர்களின் உயிர் சம்மந்தப்பட்ட பிரச்னை ஏற்பதால், போலீசார் மற்றும் மாணவர்களின் பெற்றோரும் கவனம் செலுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us