sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குடிநீரின்றி பயணிகள் அவதி பெண்ணாடம் பஸ் நிலைய அவலம்

/

குடிநீரின்றி பயணிகள் அவதி பெண்ணாடம் பஸ் நிலைய அவலம்

குடிநீரின்றி பயணிகள் அவதி பெண்ணாடம் பஸ் நிலைய அவலம்

குடிநீரின்றி பயணிகள் அவதி பெண்ணாடம் பஸ் நிலைய அவலம்


ADDED : மே 28, 2024 04:12 AM

Google News

ADDED : மே 28, 2024 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம், : பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் கடும் அவதியடைகின்றனர்.

பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தை பயன்படுத்தி சுற்றியுள்ள திருமலை அகரம், நந்திமங்கலம், வடகரை, கோனுார், தாழநல்லுார், செம்பேரி மற்றும் அரியலுார் மாவட்ட கிராமங்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் விருத்தாசலம், திட்டக்குடி, திருச்சி, கடலுார் உட்பட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

பழைய பஸ் நிலையத்தில் குடிநீர் வசதியில்லாததால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் சிரமம் அடைந்தனர். பயணிகள், பொதுமக்கள் கோரிக்கையேற்று, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பஸ் நிலைய வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்தது. நாளடைவில் பராமரிப்பின்றி குடிநீர் நிலையம் பழுதானது. இதுவரை சீரமைக்கவில்லை.

இதனால் குடிநீர் கிடைக்காமல் பயணிகள், பொது மக்கள் அவதியடைகின்றனர்.

எனவே, பெண்ணாடம் பழைய பஸ் நிலைய வளாகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us