ADDED : செப் 02, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த சிறுவத்துார், 6 வது தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மனைவி ராணி, 61; இவர் நேற்று காலை சமையல் செய்வதற்காக விறகு எடுக்க வீட்டின் பின் புறம் சென்ற போது, அங்கிருந்த விஷ பாம்பு கடித்தது.
பண்ருட்டி அரசு மருத்துமனையில் முதலுதவிக்கு பின், கடலுார் அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராணி இறந்தார். பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.