ADDED : மார் 11, 2025 04:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : கடலுார், வண்டிப்பாளையம் அரிஸ்டோ மகளிர் பப்ளிக் பள்ளியில் உலக மகளிர் தின விழா நடந்தது.
தலைமையாசிரியை சங்கீதா வரவேற்றார். சிறப்பு விருந்தினர் நடிகை வினோதினி, போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பேசினார்.
விழாவில், பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், தாளாளர் கஸ்துாரி, பள்ளி சேர்மன் சிவக்குமார், தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி சிவக்குமார், மக்கள் தொடர்பு அதிகாரி சிவராஜ், டாக்டர் நந்தினி உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.