ADDED : ஆக 24, 2024 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் அருகே ரயிலில் அடிபட்டு கட்டட தொழிலாளி பலியானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சிதம்பரம் -கிள்ளை இடையே கந்தமங்கலம் என்ற இடத்தில் ரயில் பாதையில் வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். சிதம்பரம் ரயில்வே இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது, இறந்து கிடந்த நபர், கடலூர் அடுத்துள்ள பூச்சிமேடு, துல்லாமேட்டு தெருவை சேர்ந்த பாலகுரு 40: என்பது தெரிந்தது. கட்டட வேலை செய்துவந்த அவர், சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டியில் குடும்பத்துடன் வசித்து வருவதும், இவருக்கு மனைவி மற்றும் 5 வயது மற்றும் 2 வயதில் இரு மகள்கள் உள்ளனர். ரயில் பாதையை கடக்கும்போது இறந்திருக்கலாம் என, கூறப்படுகிறது.