ADDED : மே 31, 2024 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அருகே பைக் மோதியதில் நடந்து சென்ற கூலி தொழிலாளி இறந்தார்.
பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் சேலம் மெயின்ரோடு சேர்ந்தவர் வேலாயுதம்,55; கூலி தொழிலாளி. இவர் நேற்று மதியம் 1.45 மணிக்கு தனது வீட்டில் இருந்து மெயின் ரோட்டின் இடது புறமாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பைக் வேலாயுதம் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று மதியம் 2:30 மணிக்கு அவர் இறந்தார்.
புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.