ADDED : ஏப் 30, 2024 05:42 AM
அ நிறம் | அளவு
புவனகிரி: புவனகிரி அருகே உடல் நிலை சரியில்லாததால், விவசாய கூலித் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
புவனகிரி தாலுகா மருதுார் அருகே ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் வேல்முருகன், 48; விவசாய கூலித் தொழிலாளி. அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் 3 மற்றும் ஒரு வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் உடல் நிலை சரியில்லாமல் மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி முதுஷா புகாரின் பேரில் மருதுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
