ADDED : மே 17, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
கடலுார்: குடும்ப தகராறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார், திருவந்திபுரத்தை சேர்ந்தவர் அய்யனார்,51; சலுான் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி உமா. இந்த இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.
கடந்த, 15ம் தேதி மீண்டும் தகராறு ஏற்படவே மனமுடைந்த உமா, தனது பிள்ளைகளுடன் சிதம்பரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதற்கிடையே, அன்று மாலை அய்யனார் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடன், அருகில் இருந்தவர்கள் மீட்டு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். புகாரின் பேரில், கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
