ADDED : ஜூலை 23, 2026 04:40 PM
அ நிறம் | அளவு
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பருவகால தொழிலாளர்களை பணியமர்த்தி நிரந்தரம் செய்யக்கோரி இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது.விவசாயிகள் சங்க தலைவர் சிட்டிபாபு தலைமை தாங்கி ஆலை நிர்வாகத்தை கண்டித்து உரையாற்றினார்.உழவர் பாதுகாப்பு இயக்க செயலாளர் சண்முகம், விவசாய சங்க நிர்வாகிகள் வையாபுரி, குபேந்திரன், தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, அறிவழகன், தினக்கூலி தொழிற்சங்க நிர்வாகிகள் ஆனந்தராஜ், சேகர், டிராக்டர் ஓட்டுனர் சங்க செயலாளர் வேல்முருகன், ஐ.என்.டி.யு.சி., மாநில அமைப்பாளர் செல்வராஜ், மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், விவசாய சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
