/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் கார்டுகளுக்கு 1 கிலோ கூடுதல் சர்க்கரை
/
ரேஷன் கார்டுகளுக்கு 1 கிலோ கூடுதல் சர்க்கரை
ADDED : டிச 20, 2024 04:24 AM
கடலுார்: வெள்ளம் பாதித்த கடலுார் மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளுக்கு கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்தில் பெஞ்சல் புயலினால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண நிதியாக 2,000 ரூபாய் ரொக்கம், 5 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட்டது. தற்போது மேலும் ரேஷன் கார்டுகளுக்கு ஒரு கிலோ சர்க்கரை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, மாவட்டத்தில் ஏற்கனவே அரிசி- 5 கிலோ, துவரம் பருப்பு- 1 கிலோ வழங்கப்பட்டுள்ள, கடலுார், பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டங்களில் உள்ள 150 கிராமங்களில் 310 நியாயவிலைக் கடைகளில் உள்ள 1,95,983 குடும்ப அட்டைதாரர்களும் கூடுதலாக சர்க்கரை- 1 கிலோ பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.