/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
110 வயது மூதாட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்
/
110 வயது மூதாட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்
ADDED : டிச 10, 2024 07:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி; கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். இவர் கடந்த 2011ல், 98 வயதில் இறந்தார்.
இவரது மனைவி ராசாம்பாள்,110; இவருக்கு 14 பிள்ளைகள். மூத்த மகன் சாரங்கபாணி, 73; வயதில் உயிரிழந்தார். இளையமகன் ஞானசேகரன் பராமரிப்பில் ராசாம்பாள் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ராசாம்பாளின் 110வது பிறந்தநாளை அவரது குடும்பத்தினர் நேற்று கேக் வெட்டி கொண்டாடினார்.

