sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வடலுாரில் 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனம்; விழா ஏற்பாடுகள் தீவிரம்

/

வடலுாரில் 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனம்; விழா ஏற்பாடுகள் தீவிரம்

வடலுாரில் 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனம்; விழா ஏற்பாடுகள் தீவிரம்

வடலுாரில் 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனம்; விழா ஏற்பாடுகள் தீவிரம்


ADDED : ஜன 31, 2025 09:02 AM

Google News

ADDED : ஜன 31, 2025 09:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; வடலுார் சத்திய ஞான சபையில், 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எனக்கூறிய ராமலிங்க அடிகள் என்றழைக்கப்பட்ட வள்ளலார், 1867ம் ஆண்டு கடலுார் மாவட்டம், வடலுாரில் சத்திய ஞான சபையை நிறுவினார். அருகிலுள்ள சத்திய தருமசாலையில் வள்ளலார் ஏற்றிய அணையா தீபமும், எழுதியருளிய அருட்பெருஞ்ஜோதி அகவலும், எளியவர் பசி போக்கும் அணையா அடுப்பும் உள்ளது.

வள்ளலார் பிறந்த மருதுார் இல்லம், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி இல்லாம், சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் இல்லம் முக்கிய பகுதிகளாக உள்ளது.

வள்ளலார் சத்திய ஞான சபையில் மாதம்தோறும் பூச நட்சத்திரத்தன்று, ஆறு திரைகளை நீக்கியும், தை மாதத்தில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசன பெருவிழா நடைபெற்று வருகிறது.

அதன்படி, வரும் பிப்.11ம் தேதி 154ம் ஆண்டு ஜோதி தரிசன பெருவிழா நடக்கிறது.

இதை முன்னிட்டு சத்திய ஞான சபையில் வண்ணம் பூசும் பணிகள், மின்விளக்குகள் அமைத்தல், பக்தர்கள் தங்குவதற்கான பகுதியில் மேற்கூரை அமைத்தல், பெருவெளி வளாகத்தை சுத்தம் செய்தல் பணிகளை அறநிலையத்துறை மற்றும் வடலுார் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனாலும், பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள், தடுப்புகள் அமைத்து மறைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் திரளும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கு இது இடையூறாக இருக்கும்.

ஜோதி தரிசனத்திற்கு உலகெங்கிலும் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பதால் ஒவ்வொரு ஆண்டும் கடும் நெரிசல் ஏற்படுகிறது. தற்போது பெருவெளியில் சர்வதேச மையத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் தடுப்புகள் அமைத்து மறைத்துள்ளதால், கூடுதல் நெருக்கடி ஏற்படும் என்பதால், பக்தர்கள் வந்து செல்ல கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திடவேண்டும்.

சர்வதேச மையத்துக்கு இடைக்கால தடை

வடலுாரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், சத்திய ஞானசபைக்கு இடம் கொடுத்த பார்வதிபுரம் மக்கள் அத்திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, பா.ஜ., ஆன்மிக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு வினோத் ராகவேந்திரன் தொடர்ந்த வழக்கில், பெருவெளியில் எந்த பணியும் மேற்கொள்ளக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் தமிழக அரசு பெருவெளிக்கு அருகில் சர்வதேச ஆய்வு மையம் தொடர்பான பிற கட்டுமானப் பணிகளை மேற்கொண்டது.அதை எதிர்த்து வினோத் ராகவேந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கில், கட்டுமான பணிக்கு இடைக்கால தடை விதித்ததோடு, வழக்கு விசாரணை முடியும் வரை தற்போதைய நிலை தொடர வேண்டும் என உத்தரவிட்டது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து, வழக்கை பிப்ரவரி 28ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.








      Dinamalar
      Follow us