தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கஞ்சா பதுக்கல் 2 பேர் கைது

கஞ்சா பதுக்கல் 2 பேர் கைது

கஞ்சா பதுக்கல் 2 பேர் கைது


ADDED : ஜன 05, 2025 07:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2025 07:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணாடம் : பெண்ணாடத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று பகல் 2:00 மணியளவில் ரோந்து சென்றனர்.

அப்போது, சோழன் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சந்தேகத்தின்பேரில் நின்ற இரு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர்கள் தாழநல்லூர் கணேசன் மகன் கரண், 20; செல்லவேல் மகன் விஷ்வா, 19, என்பதும், இருவரும் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி விற்க வைத்திருப்பது தெரிந்தது.

இருவரிடம் இருந்து தலா 50 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து கரண், விஷ்வா இருவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us