sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குறும்பட உதவி இயக்குனரை கடத்திய 2 பேர் கைது; காட்டுமன்னார்கோவிலில் பரபரப்பு

/

குறும்பட உதவி இயக்குனரை கடத்திய 2 பேர் கைது; காட்டுமன்னார்கோவிலில் பரபரப்பு

குறும்பட உதவி இயக்குனரை கடத்திய 2 பேர் கைது; காட்டுமன்னார்கோவிலில் பரபரப்பு

குறும்பட உதவி இயக்குனரை கடத்திய 2 பேர் கைது; காட்டுமன்னார்கோவிலில் பரபரப்பு


ADDED : பிப் 07, 2025 04:18 AM

Google News

ADDED : பிப் 07, 2025 04:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : காட்டுமன்னார்கோவிலில் குறும்பட உதவி இயக்குனரை, காரில் கடத்தி சென்று தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பேரரசி தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன், 50; குறும்பட உதவி இயக்குனரான இவர், அதே பகுதியில் வாடகை பாத்திரக் கடை நடத்தி வருகிறார். கார்த்திகேயன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறும்படம் எடுக்க சிதம்பரம் எஸ்.ஆர்., நகரை சேர்ந்த, தென் ஆப்ரிக்காவில் பணிபுரியும் இன்ஜினியர் பிரசாத் பட்டேல்,50; என்பவரிடம் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

குறும்படத்தை யூடியூப்பில் வெளியிட்ட கார்த்திகேயன், கடனை திருப்பி தரவில்லை. மொபைல் போனில் கார்த்திகேயனை தொடர்பு கொண்ட பிரசாத் பட்டேல், கடனை திருப்பி கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த பிரசாத் பட்டேல், தனது நண்பர்கள் சிதம்பரம் ஆரணியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்திரபிரபு, 38; எம்.கே.,தோட்டம் ஜெகதீசன்,34; ஆகியோரிடம் கூறியுள்ளார்.

அதையடுத்து சந்திரபிரபு, ஜெகதீசன் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன், நேற்று முன்தினம் மாலை 3:30 மணியளவில் காரில் காட்டுமன்னார்கோவில் சென்று, கார்த்திகேயனிடம் பணத்தை கேட்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில், சந்திரபிரபு உள்ளிட்ட 4 பேர், கார்த்திகேயனை தாக்கி காரில் கடத்தி சென்று, லால்பேட்டை கைகாட்டியில் இறக்கி விட்டு சென்றனர்.

தகவலறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார், சினிமா பட பாணியில் காரை துரத்தி சென்று எள்ளேரி பஸ் நிறுத்தம் அருகே மடக்கினர். அப்போது, காரில் இருந்த 2 பேர் தப்பியோடினர். சந்திரபிரபு, ஜெகதீசனை மடக்கி பிடித்து, காரை பறிமுதல் செய்தனர். காயமடைந்த கார்த்திகேயன், காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து கார்த்திகேயன் மனைவி விமலா அளித்த புகாரின்பேரில், பிரசாத் பட்டேல் உள்ளிட்ட 5 பேர் மீது காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து சந்திரபிரபு, ஜெகதீசனை கைது செய்தனர்.தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






      Dinamalar
      Follow us