ADDED : அக் 15, 2025 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலூர்: பீர் பாட்டிலுடன் சாலையில் ரகளை செய்த, 2 பேரை போலீசார் கைது செய்தனர்
வடலூர் - பண்ருட்டி சாலையில் வடலூர் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது, 2 நபர்கள் பீர் பாட்டிலுடன் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில், வடலூர், கணபதி நகரை சேர்ந்த ராஜ் பாபு, 26; மற்றும், கலைஞர் நகரை சேர்ந்த தமிழ்வேந்தன், 27; என தெரிய வந்தது.
போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.