ADDED : அக் 03, 2025 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார் : தனியார் மதுபான பாரில் தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை - கும்ப கோணம் சாலை, வட லுார் பகுதியில், தனியார் மதுபான பார் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு சென்ற 2 பேர் மதுபாட்டில் கேட்டனர்.
பார் மூடப்பட்டதாக தெரிவித்த வடக்கு மேலுாரைச் சேர்ந்த உதவி மேலாளர் அருள்குமார், 28; என்பவரை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததுடன் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட பார்வதிபுரம் கோகுல்ராஜ், 26; தனசேகர். 24; ஆகிய இருவர் மீதும் வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.