/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் சிறையில் 2 கைதிகள் மயக்கம்
/
கடலுார் சிறையில் 2 கைதிகள் மயக்கம்
ADDED : டிச 01, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் மத்திய சிறையில் மயங்கி விழுந்த இரண்டு விசாரணை கைதிகள் அரசு மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டனர்.
திருச்சி அடுத்த திருவரம்பூரை சேர்ந்தவர் ராஜ் மகன் ராஜ்குமார், 27; குறிஞ்சிப்பாடி அடுத்த கருங்குழியை சேர்ந்தவர் மூட்டை பூச்சி (எ) சம்பத்குமார்,32; இருவரும் கடலுார் மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளனர்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட இருவரும் நேற்று சிறையில் திடீரென மயங்கி விழுந்தனர். உடன், அவர்களை சிறைக் காவலர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கடலுார், முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.