sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீடு புகுந்து பொருட்கள் சூறை நடுவீரப்பட்டு அருகே 3 பேர் கைது

/

வீடு புகுந்து பொருட்கள் சூறை நடுவீரப்பட்டு அருகே 3 பேர் கைது

வீடு புகுந்து பொருட்கள் சூறை நடுவீரப்பட்டு அருகே 3 பேர் கைது

வீடு புகுந்து பொருட்கள் சூறை நடுவீரப்பட்டு அருகே 3 பேர் கைது


ADDED : நவ 03, 2024 05:23 AM

Google News

ADDED : நவ 03, 2024 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே தகராறில் வீடு புகுந்து, டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு அடுத்த மலையடிக்குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்தவர்கள் கவியரசன், ஜனார்த்தனன், நந்தகுமார், நந்தகோபால். இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம், மதுபாட்டில்கள் வாங்கிக்கொண்டு பைக்கில் வந்தனர்.

அதே பகுதியில் உள்ள தனசேகரன், 48; வீட்டு முன்பு தடுமாறி கீழே விழுந்தனர். இதை பார்த்த தனசேகரன், பார்த்து வரக்கூடாதா என, கூறி, அவர்களை துாக்கி விட முயன்றார்.

ஆத்திரமடைந்த அவர்கள் 4 பேரும் சேர்ந்து, எங்களுக்கே அட்வைஸ் செய்கிறாயா என, கேட்டு தனசேகரனை திட்டி மதுபாட்டிலால் தாக்கினர்.

மேலும், கவியரசன் வீட்டிற்கு வந்திருந்த அவரது நண்பர்களான புவனகிரி ராஜ்குமார், கடலுார் சொத்திக்குப்பம் சரண், முருகன் ஆகிய 3 பேரும் தனசேகரன் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து வீட்டிலிருந்த கார் கண்ணாடியை உடைத்தனர். மேலும் வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து சேதப்படுத்தினர்.

தடுக்க வந்த தனசேகர் மனைவி வேல்விழி, தம்பி மனைவி ஜெயசித்ரா, தாய் சின்னபொண்ணு ஆகியவர்களை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். இதில் பலத்த காயமடைந்த தனசேகர், வேல்விழி, ஜெயசித்ரா, சின்னபொண்ணு ஆகிய 4 பேரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் கவியரசன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிந்து, ராஜ்குமார், 20; சரண்,18; முருகன்,18; ஆகிய 3 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us