/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாலிபரிடம் பணம் கேட்டு கத்தியால் குத்திய 3 பேர் கைது
/
வாலிபரிடம் பணம் கேட்டு கத்தியால் குத்திய 3 பேர் கைது
வாலிபரிடம் பணம் கேட்டு கத்தியால் குத்திய 3 பேர் கைது
வாலிபரிடம் பணம் கேட்டு கத்தியால் குத்திய 3 பேர் கைது
ADDED : அக் 27, 2024 04:44 AM

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பில், பைக்கில் வந்த வாலிபரை வழிமறித்து, பணம் கேட்டு கத்தியால் குத்திய மூவரை போலீசார் கைது செய்தனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் குணசேகரன், 24; இவர், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், சேத்தியாத்தோப்பு ராஜீவ் சிலை அருகே பைக்கில் வந்தார்.
அங்கு நின்றிருந்த சென்னிநத்தத்தை சேர்ந்த வெற்றிவேல் மகன் சரவணக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளான அள்ளூரை சேர்ந்த கனகராஜ் மகன் கலைமணி, 22; லோகநாதன் மகன் உத்திராபதி, 20; ஆகியோர், குணசேகரனை வழிமறித்து பணம் கேட்டனர். தர மறுத்ததால் அவரை கத்தியால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
காயமடைந்த குணசேகரன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிந்து சரவணக்குமார், உத்திராபதி, கலைமணி ஆகியோரை கைது செய்தனர்.