ADDED : மே 17, 2025 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மின்னல் தாக்கியதில் 3 மாடுகள் இறந்தன.
பண்ருட்டி அடுத்த குடியிருப்பு கிராமத்தில் நேற்று மாலை 6:30 மணிக்கு இடி, மின்னலுடன் மழை பெய்தது.
அப்போது, சேகர்,52; என்பவர் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த 2 பசுமாடுகள், ஒரு கன்று குட்டி மின்னல் தாக்கி இறந்தன.
செல்வபெருமாள் மனைவி கிருஷ்ணவேணி,60; என்பவரின் கூரை வீடு மீது மின்னல் தாக்கியதில் வீடு எரிந்தது. முத்தாண்டிக்குப்பம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீ மேலும் பராவாமல் அணைத்தனர்.