தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஓவர் லோடு ஏற்றிய 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்  

ஓவர் லோடு ஏற்றிய 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்  

ஓவர் லோடு ஏற்றிய 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்  


UPDATED : ஆக 17, 2026 10:56 PM

ADDED : ஆக 17, 2026 10:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 17, 2026 10:56 PM ADDED : ஆக 17, 2026 10:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு:ஓவர் லோடு ஏற்றிய 3 டிப்பர் லாரிகளை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து, போலீசில் ஒப்படைத்தனர்.

கடலுார் ஆர்.டி.ஓ.,சுந்தர்ராஜன் கடந்த 15 ம் தேதி இரவு நடுவீரப்பட்டு-எஸ்.புதுக்குப்பம் சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டார். அப்போது, அவ்வழியே து கிராவல் ஏற்றி வந்த டி.என் 54 ஏசி 2698, டி.என் 54 ஏஏ 2416, டி.என் 50 ஏ கே 3385 ஆகிய பதிவெண் கொண்ட டிப்பர் லாரிகளை நிறுத்த முயன்றனர்.

உடன், மூன்று டிரைவர்களும், லாரிகளை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். லாரிகளை, அதிகாரிகள் சோதனை செய்ததில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கிராவலை, அனுமதி இல்லாத நேரத்தில் ஏற்றிச் செல்வது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து மூன்று டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்து, நடுவீரப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து சிலம்பிநாதன்பேட்டை வி.ஏ.ஓ., சிவலிங்கம் நேற்ற முன்தினம் அளித்த புகாரின்பேரில், நடுவீரப்பட்டு போலீசார் 3 லாரிகள் மற்றும் அழகப்பாசமுத்திரத்தில் உள்ள குவாரி உரிமையாளர் பாவாடை மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us