ADDED : மார் 31, 2025 10:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை; பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பு.முடலுார் எம்.ஜி.ஆர்., சிலை அருகே 3 பேர் மது போதையில் கையில் கட்டை வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தி ஆபாசமாக திட்டினர். புகாரின் பேரில் சம்பந்தம் கிராமத்தைச் சேர்ந்த பிரேம்குமார், 24; தினகரன், 31; வேலு,48; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.