sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மரத்தில் ஜீப் மோதி 3 போலீசார் காயம்

/

மரத்தில் ஜீப் மோதி 3 போலீசார் காயம்

மரத்தில் ஜீப் மோதி 3 போலீசார் காயம்

மரத்தில் ஜீப் மோதி 3 போலீசார் காயம்


ADDED : அக் 22, 2024 06:32 AM

Google News

ADDED : அக் 22, 2024 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கைதி வழிக்காவல் பணி முடிந்து திரும்பிய போது, சென்டர் மீடியனில் ஜீப் மோதியதில் 3 போலீசார் காயமடைந்தனர்.

காரைக்கால், மேல அன்னவாசலைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 41; புதுச்சேரி காவல் துறையில் காவலராக பணிபுரிகிறார். இவர், நேற்று முன்தினம் காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு கைதி வழிக்காவல் பணிக்கு ஜீப்பை ஓட்டிச் சென்றார். காவலர் அய்யப்பன், 36; பெண் காவலர் ஆஷா, 27; ஆகியோர் உடன் சென்றனர்.

பணி முடிந்து காரைக்கால் திரும்பிக் கொண்டிருந்தனர். கடலுார், முதுநகர் அடுத்த பெரிய காரைக்காடு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த ஜீப், சென்டர் மீடியனில் மோதி, சாலையோர மரத்தில் மோதியது. இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர்.

மூவரும் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us