/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கஞ்சா விற்ற 4 பேர் கைது: நெய்வேலியில் போலீஸ் அதிரடி
/
கஞ்சா விற்ற 4 பேர் கைது: நெய்வேலியில் போலீஸ் அதிரடி
கஞ்சா விற்ற 4 பேர் கைது: நெய்வேலியில் போலீஸ் அதிரடி
கஞ்சா விற்ற 4 பேர் கைது: நெய்வேலியில் போலீஸ் அதிரடி
ADDED : மார் 18, 2024 03:58 AM
நெய்வேலி : நெய்வேலியில் கஞ்சா விற்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
நெய்வேலி, தெர்மல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் தவச்செல்வன், சந்தோஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.
நெய்வேலி வட்டம் - 29ல் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவில் உட்கார்ந்திருந்த 4 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோடினர்.
அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் - 21ஐ சேர்ந்த சக்ரவர்த்தி மகன் சுதாகர், 26; சீனிவாசன் மகன் சிவா, 20; வட்டம் - 29ஐ சேர்ந்த மோசஸ் சம்பத் மகன் பிரதீப்மோகன், 29; பாபு மகன் சிவா, 20, என்பதும், அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து, அவர்கள் நால்வரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

