sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தனியார் இடத்தில் கோவில் கட்ட முயன்ற 4 பேர் கைது

/

தனியார் இடத்தில் கோவில் கட்ட முயன்ற 4 பேர் கைது

தனியார் இடத்தில் கோவில் கட்ட முயன்ற 4 பேர் கைது

தனியார் இடத்தில் கோவில் கட்ட முயன்ற 4 பேர் கைது


ADDED : ஜன 01, 2025 07:10 AM

Google News

ADDED : ஜன 01, 2025 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே தனியார் நிலத்தில் கோவில் கட்ட முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் பழனிவேல்,50; இவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள வீரன் கோவிலில், பத்திரக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்தவர்கள் வழிபாடு நடத்தி வந்தனர். இதற்கு, பழனிவேல் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இதுசம்மந்தமாக கடந்த இரண்டு மாதத்திற்கு முன் பண்ருட்டி தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் தற்போது உள்ளதுபோல் சாமி வழிபாடு நடத்தவும், கோவில் கட்டக்கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சுந்தரமூர்த்தி, வீரசெல்வம், முருகானந்தம், பாலமுருகன், நாகப்பன் உள்ளிட்ட சிலர் அந்த நிலத்தில் கோவில் கட்டுவதற்காக நிலத்தில் இருந்த முந்திரி மரங்களை வெட்டியும், பைப் லைன்களை உடைத்தனர். தட்டிகேட்ட பழனிவேலை மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து பழனிவேல் நடுவீரப்பட்டு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சுந்தரமூர்த்தி உட்பட 5 பேர் மீது வழக்கு பதிந்து, வீரசெல்வம், 57; முருகானந்தம், 41; பாலமுருகன், 47; நாகப்பன், 65; ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த அம்பேத்கார் நகரை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் நேற்று காலை நடுவீரப்பட்டு போலீஸ் நிலையம் எதிரில் திரண்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us