/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேனில் ரகசிய அறை அமைத்து ரூ. 30 லட்சம் குட்கா கடத்தல்; சிதம்பரத்தில் 5 பேர் கைது
/
வேனில் ரகசிய அறை அமைத்து ரூ. 30 லட்சம் குட்கா கடத்தல்; சிதம்பரத்தில் 5 பேர் கைது
வேனில் ரகசிய அறை அமைத்து ரூ. 30 லட்சம் குட்கா கடத்தல்; சிதம்பரத்தில் 5 பேர் கைது
வேனில் ரகசிய அறை அமைத்து ரூ. 30 லட்சம் குட்கா கடத்தல்; சிதம்பரத்தில் 5 பேர் கைது
ADDED : டிச 12, 2024 08:12 AM

சிதம்பரம்; சிதம்பரத்தில், மினி வேனில் ரகசிய அறை அமைத்து, ரூ.30 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் கடத்திய மொத்த வியாபாரி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க, கடலுார் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
நேற்று சிதம்பரம் டி.எஸ்.பி., லாமேக் மேற்பார்வையில், அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் - சீர்காழி சாலையில் கடவாச்சேரி அடுத்த மேம்பாலம் அருகே வேகமாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரகசிய அறையில், 72 மூட்டைகளில் ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் இருந்தன. விசாரணையில், பெங்களூருவில் இருந்து மயிலாடுதுறைக்கு கடத்தி செல்வது தெரியவந்தது.
தொடர்ந்து, மொத்த வியாபாரியான, மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ்,43; வேனில் கடத்தி வந்த, தர்மபுரி மாவட்டம், ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த மணி மகன் பச்சையப்பன்,28; குட்கா வாங்க வந்த சேத்தியாத்தோப்பு குமாரக்குடி அருள்ராஜ், 32; எறும்பூர் மணிகண்டன், 35; பிரேம்குமார்,22; ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.
கடத்தி வந்த 72 மூட்டை குட்கா பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு டாடா ஏஸ் வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 30 லட்சம் ஆகும். இவற்றை சிதம்பரம் டி.எஸ்.பி., லாமேக் பார்வையிட்டார்.