sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அறுந்த மின் கம்பியில் சிக்கி 5 பசுக்கள் பலி

/

அறுந்த மின் கம்பியில் சிக்கி 5 பசுக்கள் பலி

அறுந்த மின் கம்பியில் சிக்கி 5 பசுக்கள் பலி

அறுந்த மின் கம்பியில் சிக்கி 5 பசுக்கள் பலி


ADDED : மே 19, 2025 03:11 AM

Google News

ADDED : மே 19, 2025 03:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: கடலுார் மாவட்டம், இடையன்பால்சொரி கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது நான்கு பசு மாடுகளும், அன்பழகன் என்பவருக்கு சொந்தமான இரு பசு மாடுகளும் நேற்று காலை மேய்ச்சலுக்கு சென்றன.

அப்போது, மதுராந்தகநல்லுார் துணை மின்நிலைய கட்டுப்பாட்டில் உள்ள கீழ்நத்தம் வயல்வெளியில் அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கி, ஐந்து மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. படுகாயமடைந்த ஒரு பசு மாட்டிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் பெய்த மழையின் போது, மின் கம்பி அறுந்து விழுந்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் ஒரத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

அதுபோல, அரியலுார் மாவட்டம், துாத்துார் அருகே சிலுப்பனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதாயி, 60. நேற்று காலையில், இவருடைய நான்கு பசு மாடுகளை மேய்ச் சலுக்கு ஓட்டிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

உறவினர்கள் தேடிய போது, கிராமத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து, உயிரிழந்து கிடந்தார். மேலும், அவர் ஓட்டிச் சென்ற மாடுகளில் மூன்று மாடுகள் உயிரிழந்த நிலையில், ஒரு மாடு மட்டும் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us