sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுவர்களுடன் 5 பேர் தீக்குளிக்க முயற்சி; கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

/

சிறுவர்களுடன் 5 பேர் தீக்குளிக்க முயற்சி; கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

சிறுவர்களுடன் 5 பேர் தீக்குளிக்க முயற்சி; கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

சிறுவர்களுடன் 5 பேர் தீக்குளிக்க முயற்சி; கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


ADDED : மார் 02, 2024 06:33 AM

Google News

ADDED : மார் 02, 2024 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் 2 சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார், வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர்கள் தேவநாதன், வெங்கடேசன். நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த இவ்விரு குடும்பத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் திடீரென தங்கள் மீது மண்ணெண்ணைய் ஊற்றி தீ குளிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மீட்டு விசாரித்தனர்.

அதில், இரு குடும்பத்தினரும் அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றோம். தனியார் நிலத்திற்கு செல்லும் சாலை புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, மாநகராட்சி அதிகாரிகள் கடந்த ஜனவரி 10ம் தேதி வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கினர். நாங்கள் வீடுகளை காலி செய்யாததால், இன்று (நேற்று) காலை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் இயந்திரத்துடன் வீடுகளை இடிக்க வந்தனர்.

நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இரண்டு நாட்களில் காலி செய்ய வேண்டும் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். எனவே, இந்த இடத்தில் எங்களுக்கு பட்டா வழங்கவும், மேல் நடவடிக்கை எடுக்காமல் தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

அவர்களிடம், கடலுார் புதுநகர் போலீசார் கோரிக்கை தொடர்பாக மனு கொடுக்க அறிவுறுத்தி அவர்களை வெளியேற்றினர். அதனையொட்டி அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம், தாசில்தார் பலராமன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அங்கிருந்து கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us