/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் 53வது ஆண்டு விழா
/
தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் 53வது ஆண்டு விழா
தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் 53வது ஆண்டு விழா
தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் 53வது ஆண்டு விழா
ADDED : அக் 19, 2024 04:55 AM

கடலுார் : கடலுார் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் அக்கட்சியின் 53வது ஆண்டு துவக்க விழா நடந்தது.
நெய்வேலியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கும், குறிஞ்சிப்பாடியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலைக்கும் தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமை தாங்கி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மாநில ஜெ.,பேரவை துணை செயலாளர்கள் சிவசுப்பிரமணியன், பக்தரட்சகன், மாநில அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் சூரியமூர்த்தி, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ராஜசேகர், விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், பாஷ்யம், வினோத், கமலக்கண்ணன், நகர செயலாளர்கள் கோவிந்தராஜ், பாபு, பேரூராட்சி செயலாளர் ஆனந்தபாஸ்கரன், மாவட்ட அவைத் தலைவர் முத்துலிங்கம், துணை செயலாளர்கள் ஞானசெல்வி கல்யாணசுந்தரம், கோவிந்தராஜ், பொருளாளர் தேவநாதன், பொதுக்குழு உறுப்பினர் பாண்டுரங்கன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தங்கப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.