ADDED : ஜன 17, 2026 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், தேவனாம்பட்டினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, குண்டு உப்பலவாடி கரும காரிய கொட்டகையில் பணம் வைத்து சூதாடிய கும்பலை பிடித்து விசாரித்தனர்.
இதில், குண்டு உப்பலவாடி ரகு,42; அப்பு,38; தியாகு,23; வினோத்,30; பாபு, சுந்தரராஜன் ஆகியோரை கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.
அவர்களிடம் இருந்து 1,100 ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய குண்டு உப்பலவாடி சுப்ரமணி உட்பட 6 பேரை தேடி வருகின்றனர்.

