sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கதண்டு கொட்டி 7 பேர் காயம்

/

கதண்டு கொட்டி 7 பேர் காயம்

கதண்டு கொட்டி 7 பேர் காயம்

கதண்டு கொட்டி 7 பேர் காயம்


ADDED : ஏப் 27, 2025 07:17 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 07:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே கதண்டுகள் கொட்டியதில் மூதாட்டி உட்பட 7 பேர் காயமடைந்தனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கவனை கிராமத்தில் நேற்று பகல் 11:00 மணிக்கு அப்பகுதி சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடினர். அப்போது, அங்குள்ள புளியமரத்தில் இருந்த கதண்டு எனப்படும் விஷ வண்டுகள் கூட்டின் மீது பந்து விழுந்தது.

இதனால், கூட்டில் இருந்து கதண்டுகள் பறந்ததால் அவ்வழியாக சென்றவர்கள் அலறியடித்து ஓடியனர்.

கதண்டு கொட்டியதில் அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மனைவி விசாலாட்சி, 80; முருகானந்தம் மனைவி யமுனா, 44, உட்பட 7 பேர் காயமடைந்தனர். இவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். டாக்டர் ராஜ்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர், தீவிர சிகிச்சை அளித்தனர்.

புளியமரத்தில் அதிகளவு கூடு கட்டியுள்ள கதண்டுகளை அழிக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us