/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
9 வயது சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
/
9 வயது சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
ADDED : செப் 24, 2024 08:05 PM

கடலுார்,:கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த எஸ்.ஏரிப்பாளையத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் மணிகண்டன், 24; கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி, பார்வையற்ற மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர்.
கடந்த 2021ம் ஆண்டு, மனைவி மற்றும் குழந்தையை கவனித்துக் கொள்ள 9 வயது சிறுமியை, மணிகண்டன் தன் வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது மணிகண்டன், சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இது குறித்த புகாரில், 2021ம் டிச., 13ல், பண்ருட்டி மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, போக்சோவில் மணிகண்டனை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை, கடலுார் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி ரமேஷ், மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, ஒரு மாதத்திற்குள் 7 லட்சம் ரூபாய் அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மணிகண்டன் கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.