sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

டாக்டர் வீட்டில் 97 சவரன் ரூ.10 லட்சம் கொள்ளை

/

டாக்டர் வீட்டில் 97 சவரன் ரூ.10 லட்சம் கொள்ளை

டாக்டர் வீட்டில் 97 சவரன் ரூ.10 லட்சம் கொள்ளை

டாக்டர் வீட்டில் 97 சவரன் ரூ.10 லட்சம் கொள்ளை


ADDED : ஜூலை 26, 2025 08:06 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 08:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அருகே அரசு டாக்டர் வீட்டில், 97 சவரன் நகை, 10 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், புதுப்பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா, 44; முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டாக்டர். இவரது மனைவி ஆர்த்தியும் டாக்டர். தம்பதி விழுப்புரத்தில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.

புதுப்பிள்ளையார்குப்பம் வீட்டின் கீழ் தளத்தில் ராஜாவின் பெற்றோர் வசிக்கின்றனர். மேல்தளத்தில் ராஜா தங்குவது வழக்கம். நேற்று காலை, ராஜா தந்தை காசிலிங்கம், வீட்டின் மேல் மாடிக்கு சென்றார்.

கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே பீரோ உடைக்கப்பட்டு, 97 சவரன் நகைகள், 10 லட்சம் ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. நகைகள் மதிப்பு, 70 லட்சம் ரூபாய்.

எஸ்.பி., ஜெயக்குமார், டி.எஸ்.பி., ராஜா, காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் நந்த குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து கொள்ளை யர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us