ADDED : ஜன 28, 2025 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் அடுத்த வெள்ளப்பாக்கத்தை சேர்ந்தவர் சண்முகம்,61, கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை சைக்கிளில் அழகியநத்தம் தென்பெண்ணையாற்று பாலம் வழியாக சென்றார். அப்போது
சைக்கிளிலிருந்து தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார். ஆம்புலன்ஸ் மூலம் கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இறந்துவிட்டார்.
துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

