/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டிராக்டரில் மணல் கடத்தியவருக்கு வலை
/
டிராக்டரில் மணல் கடத்தியவருக்கு வலை
ADDED : டிச 09, 2024 08:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே டிராக்டரில் ஆற்றுமணல் கடத்திய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று கார்குடல் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் உள்ள மணிமுக்தாற்றில், டிராக்டரில் மர்மநபர்கள் சிலர் ஆற்றுமணல் கடத்தியது தெரிய வந்தது.
இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, 2 டிராக்டர் 1 டிப்பரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.