/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பஸ்சில் மூதாட்டிக்கு மயக்க சாக்லேட் கொடுத்து 2 சவரன் நகை, பணம் திருட்டு சிதம்பரம் அருகே துணிகரம்
/
பஸ்சில் மூதாட்டிக்கு மயக்க சாக்லேட் கொடுத்து 2 சவரன் நகை, பணம் திருட்டு சிதம்பரம் அருகே துணிகரம்
பஸ்சில் மூதாட்டிக்கு மயக்க சாக்லேட் கொடுத்து 2 சவரன் நகை, பணம் திருட்டு சிதம்பரம் அருகே துணிகரம்
பஸ்சில் மூதாட்டிக்கு மயக்க சாக்லேட் கொடுத்து 2 சவரன் நகை, பணம் திருட்டு சிதம்பரம் அருகே துணிகரம்
ADDED : டிச 19, 2024 12:58 AM
சிதம்பரம்: சிதம்பரம் அருகே அரசு பஸ்சில் பயணித்த மூதாட்டிக்கு மயக்க சாக்லெட் கொடுத்து 2 பவுன் நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்ற தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த பனங்குடியை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி புஷ்பவள்ளி,60; இவர் நேற்று முன்தினம் மதியம் நாகப்பட்டினத்தில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்றார். அங்கிருந்து, அரசு விரைவு பஸ்சில் ஏறி, சீழ்காழிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அவர் அருகில், ஒரு தம்பதி வந்து அமர்ந்துள்ளனர். அவர்கள் புஷ்பவள்ளியிடம் பேச்சு கொடுத்து, ஒரு சாக்லேட் கொடுத்துள்ளனர். அதனை வாங்கி சாப்பிட்ட சில நிமிடங்களில், பஸ்சிலேயே மயக்கம் அடைந்துள்ளார்.
உடன் அந்த தம்பதி, புஷ்பவள்ளியின் கழுத்தில் இருந்த 2 சவரன் நகை மற்றும், பர்சில் வைத்திருந்த 1,300 ரூபாய் பணத்தை திருடிக்கொண்டு வழியில் இறங்கி தப்பியுள்ளனர்.
சிதம்பரம் பஸ் நிலையம் வந்தபோது புஷ்பவள்ளி மயங்கிய நிலையில் இருப்பதை பார்த்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர், சிதம்பரம் நகர போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம், புஷ்பவள்ளியை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து, உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து, மயக்க சாக்லேட் கொடுத்து, நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

