ADDED : பிப் 13, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர் தொல்காப்பியர் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 36. இவர், கடந்த 9ம் தேதி இரவு தனது வீட்டின் மொட்டை மாடியில் மொபைல் போன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, அவர் மாடியில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். உடன், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினர்.
புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.