sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

துக்க நிகழ்ச்சியில் வெடி விபத்து மேளம் அடித்த வாலிபர் பலி; விருத்தாசலம் அருகே சோகம்

/

துக்க நிகழ்ச்சியில் வெடி விபத்து மேளம் அடித்த வாலிபர் பலி; விருத்தாசலம் அருகே சோகம்

துக்க நிகழ்ச்சியில் வெடி விபத்து மேளம் அடித்த வாலிபர் பலி; விருத்தாசலம் அருகே சோகம்

துக்க நிகழ்ச்சியில் வெடி விபத்து மேளம் அடித்த வாலிபர் பலி; விருத்தாசலம் அருகே சோகம்


ADDED : நவ 06, 2024 08:23 AM

Google News

ADDED : நவ 06, 2024 08:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே துக்க நிகழ்ச்சி ஊர்வலத்தில் வெடி விபத்தில், மேளம் அடித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த தே.பவழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அம்சாயாள், 90. இவர் வயது மூப்பின் காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். அவரது இறுதி ஊர்வலம் நேற்று பகல் 2:00 மணியளவில் நடந்தது. ஊர்வலத்தில் சணல் வெடியை தெருவில் வைத்து வெடித்தனர். அதில், வெடிகள் ஆங்காங்கே சிதறி வெடித்தது. இதில், அங்கு மேளம் அடித்துக் கொண்டிருந்த, தே.பவழங்குடி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் மகன் ஆகாஷ், 18, என்பவர் மீது சணல் வெடி விழுந்து வெடித்தது.

இதில் படுகாயமடைந்த ஆகா ைஷ, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ஆகாஷ் இறந்து விட்டதாக கூறினார்.

மேலும், வெடி விபத்தில் அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி, 63, என்பவரது இடது கை, நித்திஷ், 23, இடது கன்னத்தில் லேசான காயங்களுடன் தப்பினர். இருவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.






      Dinamalar
      Follow us