ADDED : நவ 27, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்,: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக துணை வேந்தராக, கடந்த 3 ஆண்டுகள் பதவி வகித்தவர் கதிரேசன். இவரது பதவிக்காலம் கடந்த 23ம் தேதி முடிவடைந்தது.
அதையடுத்து, புதிய துணைவேந்தர் நியமிக்கும் வரை, பல்கலைக்கழக அன்றாட செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்கக இயக்குநர் ஆபிரஹாம் தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாக குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில், தமிழ்நாடு அரசு நிதித் துறை கூடுதல் செயலர் அருண்சுந்தர் தயாளன், அண்ணாமலைப் பல்கலைக்கழக கலைப்புல முதல்வர் அருட்செல்வி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.