/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எ.வடக்குப்பம் கிராம சாலை மோசம் வாகன ஓட்டிகள் கடும் 'அவதி'
/
எ.வடக்குப்பம் கிராம சாலை மோசம் வாகன ஓட்டிகள் கடும் 'அவதி'
எ.வடக்குப்பம் கிராம சாலை மோசம் வாகன ஓட்டிகள் கடும் 'அவதி'
எ.வடக்குப்பம் கிராம சாலை மோசம் வாகன ஓட்டிகள் கடும் 'அவதி'
ADDED : நவ 03, 2024 07:00 AM

விருத்தாசலம்,: குண்டும், குழியுமாக உள்ள எருமனுார் - எ.வடக்குப்பம் கிராம இணைப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் அடுத்த எருமனுார் - எ.வடக்குப்பம் கிராம இணைப்பு சாலையில், தனியார் பள்ளி பஸ், லாரி, கார், வேன், டெம்போ உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.
இந்நிலையில், இந்த சாலை போட்டபட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், சாலை முழுவதும் தற்போது ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி, எருமனுார் - எ.வடக்குப்பம் கிராம இணைப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.