sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கால்நடை மருந்தகத்திற்கு சொந்தக் கட்டடம் தேவை

/

கால்நடை மருந்தகத்திற்கு சொந்தக் கட்டடம் தேவை

கால்நடை மருந்தகத்திற்கு சொந்தக் கட்டடம் தேவை

கால்நடை மருந்தகத்திற்கு சொந்தக் கட்டடம் தேவை


ADDED : பிப் 18, 2024 12:14 AM

Google News

ADDED : பிப் 18, 2024 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: கொத்தட்டை கால்நடை மருந்தகத்திற்கு சொந்தக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை கிராம மக்கள் அதிகளவில் கால்நடைகளை வளர்க்கின்றனர். கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால், அதே பகுதியில் உள்ள கால்நடை மருந்தகத்திற்கு ஓட்டிச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கால்நடை மருந்தகம் பழமையான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின், கீழ் பகுதியில் இயங்குகிறது. இங்கு போதிய இடவசதி இல்லாததால் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்க கால்நடை ஆய்வாளர் சிரமம் அடைகின்றனர்.

மேலும், பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் கீழ்பகுதியில் கால்நடை மருந்தகம் இயங்கி வருவதால் எந்நேரமும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, கொத்தட்டை கால்நடை மருந்தகத்திற்கு சொந்தமாக புதிய கட்டடம் கட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us