sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கருக்கலைப்பு வழக்கு 2 பேருக்கு 'குண்டாஸ்'

/

கருக்கலைப்பு வழக்கு 2 பேருக்கு 'குண்டாஸ்'

கருக்கலைப்பு வழக்கு 2 பேருக்கு 'குண்டாஸ்'

கருக்கலைப்பு வழக்கு 2 பேருக்கு 'குண்டாஸ்'


ADDED : ஏப் 26, 2025 09:53 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 09:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட வழக்கில் 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், வேப்பூர் கூட்ரோடு பகுதியில் திட்டக்குடி அடுத்த மா.புடையூரைச் சேர்ந்த தென்னரசு, 32, கள்ளக்குறிச்சி முருகேசன், 46, ஹசீரா பீவி, நல்லம்மாள் ஆகிய 4 பேர் அரசு அங்கீகாரம் பெறாமல் வேனில் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபடுவதாக புகார் வந்தது. இதுகுறித்து அரசு மருத்துவர் அகிலன், வேப்பூர் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து தென்னரசு, முருகேசன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அதில், முருகேசன் மீது சின்னசேலம் போலீஸ் ஸ்டேஷனில் 1 கருக்கலைப்பு வழக்கு உள்ளது. தென்னரசு, முருகன் ஆகியோரின் குற்றங்களை தடுக்கும் பொருட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டார்.

அதன்பேரில், கடலுார் மத்திய சிறையில் உள்ள இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் நேற்று வழங்கி கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us