ADDED : நவ 26, 2024 07:16 AM
அ நிறம் | அளவு
கடலுார்; கடலுார் கொலை வழக்கில் நான்கு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளியை, போலீசார் கைது செய்தனர்.
கடலுார் முதுநகரைச் சேர்ந்தவர் காத்தவராயன் மகன் விஜய்,26. இவர் சிவானந்தபுரத்தைச் சேர்ந்த தினேஷ் பெஞ்சமின் மகன் ஜெய்வின் ஜோசப்,18, என்பவரை கடந்த 2020ம் ஆண்டு கொலை செய்த வழக்கில் முதுநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின், ஜாமினில் வெளியே வந்த அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார்.
இவரை, டி.எஸ்.பி., ரூபன்குமார் மேற்பார்வையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் உள்ளிட்ட தனிப்படை போலீசார் தேடி வந்தனர். ஒடிசாவில் மறைந்திருந்த விஜயை, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
